செய்திகள்
கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி

ரேஷன்கார்டுதாரர்களுக்கு கைவிரல் ரேகை பதிவு செய்தாலே அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும்- கலெக்டர் தகவல்

Published On 2020-10-02 16:34 IST   |   Update On 2020-10-02 16:34:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேஷன்கார்டு தாரர்களுக்கு மின்னணு அட்டையுடன் கைவிரல் ரேகை பதிவு செய்தால் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வழங்கப் படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் 1,094 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கூட்டுறவு சங்கத்தின் மூலம் 1,058 கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் 36 கடைகளும் செயல்படுகின்றன. இந்த மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 8 ஆயிரத்து 482 ரேஷன்கார்டுகள் உள்ளன.

இந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு மின்னணு ரேஷன் கார்டு மூலம் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கைவிரல் ரேகை பதிவு செய்யும் முறை (பயோ மெட்ரிக்) மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் மின்னணு ரேஷன் கார்டுடன் கைவிரல் ரேகை பதிவு செய்வதன் மூலமே அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நடைமுறை அக்டோபர் 1-ந் தேதி (நேற்று) முதல் அமலுக்கு வந்துள்ளது. கைரேகை பதிவு செய்தால் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும்.

கைரேகை ஏற்று கொள்ளாத பட்சத்தில், ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி எண் அனுப்பப்படும். அதன் அடிப்படையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும். மேலும், அவற்றிலும் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் மின்னணு ரேஷன் கார்டுவில் பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி எண் அனுப்பப்பட்டு, அதன் அடிப்படையில் பொருட்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Similar News