செய்திகள்
கோப்புபடம்

ஊத்தங்கரை அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

Published On 2020-10-01 12:40 GMT   |   Update On 2020-10-01 12:40 GMT
ஊத்தங்கரை அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.7 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
ஊத்தங்கரை:

ஊத்தங்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் நத்தன்கொட்டாய் சின்னப்பன் ஏரிகரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய சாத்தனூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன்(வயது30), நத்தன்கொட்டாய் மோகன்(32), வண்டிகாரன்கொட்டாய் இளங்கோ(27) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.7ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News