செய்திகள்
பெண்ணை கொன்று தீவைத்து எரிப்பு - ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
தேன்கனிக்கோட்டை அருகே பெண்ணை கொன்று தீ வைத்து எரித்த சம்பவத்தில் ஓட்டல் உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
அஞ்செட்டி அருகே சின்னமலை வனப்பகுதியில் கடந்த 24-ந்தேதி தீயில் எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் பிணம் கிடந்தது. இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் மஞ்சுமலை பகுதியை சேர்ந்த மணிமேகலை (வயது40) என்பதும், கள்ளக்காதல் விவகாரத்தில் அவரை கொலை செய்து தீவைத்து எரித்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக ஏத்தகிணறு பகுதியை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் கோவிந்தசாமி (47), சின்னமோட்ராகி பகுதியை சேர்ந்த பத்திநாதன்(62) ஆகிய 2 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.