செய்திகள்
தற்கொலை

கடலூரில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Published On 2020-09-30 14:01 GMT   |   Update On 2020-09-30 14:01 GMT
கடலூரில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர்:

கடலூர் மஞ்சக்குப்பம் ஜெகதேவ்நகரை சேர்ந்தவர் செல்வக்குமார். இவருடைய மனைவி நவீனா (வயது 31). இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. 

இதையடுத்து செல்வக்குமார் மஸ்கட் நாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார். நவீனா தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது. 
இந்த நிலையில் சம்பவத்தன்று நவீனா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீனா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News