செய்திகள்
தற்கொலை

கந்திகுப்பம் அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-09-30 11:49 GMT   |   Update On 2020-09-30 11:49 GMT
கந்திகுப்பம் அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:

கந்திகுப்பம் அருகே உள்ள அஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 33). லாரி டிரைவர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த சுரேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News