செய்திகள்
சாக்கோட்டை அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
சாக்கோட்டை போலீஸ் சரகம் மித்திரா வயலை சேர்ந்தவர் சுப்பையா (வயது 55). விவசாயியான இவர் தீராத நோயால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் அவரது நோய் குணமாகவில்லையாம். இதனால் விரக்தியடைந்த அவர் விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.