செய்திகள்
விபத்து

சிங்கம்புணரி அருகே வாகனம் மோதி ஆசிரியர் பலி

Published On 2020-09-28 11:19 GMT   |   Update On 2020-09-28 11:19 GMT
சிங்கம்புணரி அருகே நடந்து சென்ற ஆசிரியர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிங்கம்புணரி:

சிங்கம்புணரி அருகே எஸ்.வி. மங்களம் இமானுவேல் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது48). இவர் தனியார் பள்ளி ஆசிரியராக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றி ஓய்வுபெற்றார். இவர் திண்டுக்கல் -திருப்பத்தூர் சாலை ஓரத்தில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்த புகாரின்பேரில் எஸ்.வி. மங்களம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News