செய்திகள்
இளையான்குடி அருகே மணல் கடத்திய 2 பேர் கைது
இளையான்குடி அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையான்குடி:
இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில் திருட்டுத்தனமாக மணல் கடத்துவதாக ரகசிய தகவல் சாலைக்கிராமம் காவல்துறையினருக்கு வந்துள்ளது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாண்டியன் சோதனையிட்டு வாணியங்குடி கிராமத்தில் மணல் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்தார்.
இதுதொடர்பாக பூலாங்குடி கிராமத்தை சேர்ந்த அமல்ராஜ் (வயது35), அடைக்கலராஜ் (43) ஆகிய 2 பேரையும் பிடித்து போலீசார் வழக்குபதிந்து கைது செய்தனர்.