செய்திகள்
கோப்புபடம்

வேதாரண்யத்தில் மது விற்ற 2 பேர் கைது

Published On 2020-09-24 07:08 GMT   |   Update On 2020-09-24 07:08 GMT
வேதாரண்யத்தில் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் வேதாரண்யம் நகர் பகுதியில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேதாரண்யம் மந்திதோப்பு பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த செல்வராசு (வயது 48), வேதாரண்யம் தெற்கு பகுதி சேது சாலையை சேர்ந்த செல்வராஜ் (55) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். 

பின்னர் அவர்கள் மறைந்து வைத்திருந்த 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News