செய்திகள்
முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை
அன்னவாசல் பேரூராட்சி பகுதிகளில் முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.
அன்னவாசல்:
அன்னவாசல் பேரூராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று அன்னவாசல் பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி தலைமையில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி அருகே முகாம்அமைத்து இருந்தனர். அப்போது, முககவசம் அணியாமல் வாகனங்களில் வருபவர்களை நிறுத்தி, அவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் தொந்தரவு இருக்கிறதா? என நடமாடும் மருத்துவகுழு டாக்டர் முருகேசன் தலைமையிலான சுகாதாரத்துறையினர் கேட்டறிந்து அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலை பரிசோதனை செய்தனர். மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.