செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டவுன் பகுதியில் பெட்டி கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற ஆறுமுகம் (வயது 46) , அழகுசுந்தரம் (42) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.