செய்திகள்
கோப்புப்படம்

விளையாட்டு விபரீதமானது - தூக்கில் தொங்கியபோது போல் ‘செல்பி’ எடுக்க முயன்ற வாலிபர் உயிரிழப்பு

Published On 2020-09-12 21:36 GMT   |   Update On 2020-09-12 21:36 GMT
மின்விசிறியில் வேட்டியை மாட்டி நாற்காலியில் ஏறி நின்று தூக்கில் தொங்கியபோது போல் ‘செல்பி’ எடுக்க முயன்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை போலீஸ் சரகம் பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் திரவியம்(வயது 24). இவர் தேவகோட்டையில் உள்ள உறவினருக்கு சொந்தமான ஆழ்துளை கிணறு போடும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று புதுவயலில் உள்ள ஒரு வீட்டிற்கு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இரவு பஸ் நிலையம் அருகே நிறுவனத்தினர் ஏற்பாடு செய்திருந்த அறையில் தங்கினார்.

அப்போது விளையாட்டிற்காக தூக்கில் தொங்குவது போல் செல்பி எடுக்க முடிவு செய்தார். இதற்காக மின்விசிறியில் வேட்டியை மாட்டி நாற்காலியில் ஏறி நின்று தூக்கு மாட்டுவது போல் செல்வி எடுத்துள்ளார். அதை உறவினர்களின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நாற்காலி சரிந்ததால் அவர் தூக்கில் தொங்கினார். இதில் கழுத்து இறுகி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News