செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

புதிதாக 78 பேருக்கு கொரோனா - மதுரையில் 109 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

Published On 2020-09-12 21:22 GMT   |   Update On 2020-09-12 21:22 GMT
மதுரையில் நேற்று புதிதாக 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மதுரை:

மதுரையில் நேற்று புதிதாக 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 57 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 247 ஆக உயர்ந்தது.

நேற்று 109 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதில் 85 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். இதன் மூலம் கொரோனாவால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 960 ஆக உயர்ந்துள்ளது. இவர்களை தவிர 911 பேர் சிகிச்சையில் உள்ளனர். மதுரையில் நேற்று கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை
Tags:    

Similar News