செய்திகள்
கறம்பக்குடியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்- அதிகாரிகள் அதிரடி
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது முகக்கவசம் அணியாத பொதுமக்களிடம் இருந்து தலா ரூ.200 வீதம்,35 நபருக்கு ரூ.7000உடனடியாக அபராதம் விதித்தார்.
இப்பணியில் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுத பாணி, துணை ஆட்சியர்(பயிற்சி) , தாசில்தார் சேக் அப்துல்லா, காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், கறம்பக்குடி வருவாய் ஆய்வாளர் ஸ்டெல்லா, பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், பிலாவிடுதி கிராம நிர்வாக அலுவலர் தீபிகா ஆகியோர் ஈடுபட்டனர்.