செய்திகள்
காரைக்குடியில் மனநலம் பாதித்த பெண் பாலியல் பலாத்காரம்
காரைக்குடியில் மனநலம் பாதித்த பெண்ணை 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
காரைக்குடி:
காரைக்குடி வாட்டர்டேங்க் பகுதி உள்ள கோட்டையூர் சாலையில் கடந்த ஓராண்டாக 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் மனநலம் பாதித்த நிலையில் சுற்றித்திரிந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக மனநலம் பாதித்த பெண்ணை கவனித்த அந்த பகுதி கடைக்காரர்கள் அவரது வயிற்று பகுதி சற்று பெரியதாக இருந்ததை கண்டு விசாரித்துள்ளனர். அப்போது அந்த பெண் இரவு நேரத்தில் தூங்கிக்கொண்டிருந்த தன்னை 4 பேர் குடிபோதையில் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். அவரை மருத்துவபரிசோதனை செய்ததில் 7 மாத கர்ப்பிணியாக உள்ளது தெரியந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.