செய்திகள்
பாம்பு

வீட்டின் குளியல் அறையில் பதுங்கிய 3 பாம்புகள்- தீயணைப்பு படையினர் பிடித்தனர்

Published On 2020-09-11 11:01 GMT   |   Update On 2020-09-11 11:01 GMT
ஈரோட்டில் வீட்டின் குளியல் அறையில் பதுங்கிய 3 பாம்புகளை பிடித்த தீயணைப்பு படையினர் காட்டுப்பகுதியில் விட்டனர்.
ஈரோடு:

ஈரோடு முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரியம் முதலாவது பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 48). இவரது மனைவி நேற்று காலை வீட்டின் குளியல் அறைக்குள் சென்றார். அப்போது அங்கு தண்ணீர் வெளியேறும் குழாயில் பாம்புகள் இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் அங்குவிரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது 3 பாம்புகள் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த பாம்புகளை தீயணைப்பு படையினர் லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்புகள் காட்டுப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.
Tags:    

Similar News