செய்திகள்
கோப்பு படம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 99 பேருக்கு கொரோனா- ஒருவர் பலி

Published On 2020-09-11 10:11 GMT   |   Update On 2020-09-11 10:11 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 99 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், நேற்று 99 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,105 ஆக அதிகரித்து உள்ளது.

இந்தநிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 115 பேர் குணமடைந்ததால் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அந்த வகையில், இதுவரை 6,192 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு நேற்று ஒருவர் உயிரிழந்தார். இதன்மூலம், தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்தது.

அரிமளம் ஒன்றியத்தில ஏம்பல் பகுதியை சேர்ந்த 24 வயது பெண், கல்லூர் பகுதியை சேர்ந்த 20 வயது பெண், அதே ஊரை சேர்ந்த 60 வயது மூதாட்டி, 20 வயது பெண், 35 வயது பெண், 13 வயது சிறுமி, நெடுங்குடி கிராமத்தை சேர்ந்த 31 வயது வாலிபர், 42 வயது ஆண், 54 வயது பெண், குரும்பூர் கிராமத்தை சேர்ந்த 30 வயது பெண், ஒரு மாத குழந்தை, 4 வயது சிறுமி, 55 வயது பெண்.

அரிமளம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த 38 வயது ஆண், 4 வயது சிறுவன், 25 வயது பெண், 53 வயது பெண், 51 வயது ஆண், 13 வயது சிறுமி, கே.ராயவரம் கிராமத்தை சேர்ந்த 44 வயது ஆண், கே.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த 60 வயது முதியவர் உள்பட 21 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
Tags:    

Similar News