செய்திகள்
கோப்பு படம்.

புதுவையில் கொரோனா தொற்றுக்கு 11 பேர் பலி

Published On 2020-09-07 20:15 IST   |   Update On 2020-09-07 20:15:00 IST
புதுவையில் நேற்று ஒரே நாளில் 11 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 503 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி:

புதுவையில் நேற்று ஆயிரத்து 73 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 292 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் புதுவையில் 283, காரைக்காலில் 17, ஏனாமில் 3, மாகேயில் 9 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுவையில் தற்போது ஆயிரத்து 476, காரைக்காலில் 83, ஏனாமில் 153, மாகியில் 38 பேர் நோய் தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் புதுவையில் 460, காரைக்காலில் 29, ஏனாமில் 10, மாகேயில் 4 பேர் என மொத்தம் 503 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 17 ஆயிரத்து 316 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆயிரத்து 752 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 12 ஆயிரத்து 135 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

புதுவையில் 2 ஆயிரத்து 824, காரைக்காலில் 144, ஏனாமில் 136 பேர் என 3 ஆயிரத்து 104 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 314 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருந்தனர்.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 11 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். புதுவை ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

இதனால் புதுவை மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 325 ஆக உயர்ந்துள்ளது. இத்தகவலை புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News