செய்திகள்
கொரோனா பரிசோதனை

கிணத்துக்கடவில் பேரூராட்சி பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

Published On 2020-09-06 07:32 GMT   |   Update On 2020-09-06 07:32 GMT
கிணத்துக்கடவு பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் பேரூராட்சி பணியாளர்கள் 50 பேருக்கு நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சித்ரா மேற்பார்வையில் கொரோனா மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
கிணத்துக்கடவு:

கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று கிணத்துக்கடவு பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் பேரூராட்சி பணியாளர்கள் 50 பேருக்கு நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சித்ரா மேற்பார்வையில் கொரோனா மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதில் டாக்டர்கள் முகில், சமீதா ஆகியோர் கலந்து கொண்டு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இந்த பரிசோதனை முடிவுகள் நாளை (திங்கட்கிழமை) வெளிவரும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News