செய்திகள்
ஆலங்குடி அருகே போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
ஆலங்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகேயுள்ள புழக்கடைப்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 34). இவரது மனைவி சாந்தி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த சிறுமி வீட்டின் அருகில் உள்ள தைலக்காட்டிற்கு இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து சிவக்குமார் சென்று, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறினார்.
இதைத் தொடர்ந்து சிறுமியின் தாயார் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமலதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சிவக்குமாரை கைது செய்தார்.
ஆலங்குடி அருகேயுள்ள புழக்கடைப்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 34). இவரது மனைவி சாந்தி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த சிறுமி வீட்டின் அருகில் உள்ள தைலக்காட்டிற்கு இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து சிவக்குமார் சென்று, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறினார்.
இதைத் தொடர்ந்து சிறுமியின் தாயார் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமலதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சிவக்குமாரை கைது செய்தார்.