செய்திகள்
காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்
காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:
கொரோனா பாதிப்பால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எம்.பி வசந்தகுமார் காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் வசந்தகுமார் உயிர் பிரிந்தது.
இந்நிலையில் காங். எம்.பி. வசந்தகுமார் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது,
வசந்தகுமாரின் மறைவு வேதனையளிக்கிறது. வசந்தகுமாரின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கும், தொகுதி மக்களுக்கும் பேரிழப்பு. எம்.பி. வசந்தகுமாரின் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.