செய்திகள்
கோப்பு படம்.

பாகூர் தாசில்தார் அலுவலக ஊழியர் கொரோனாவுக்கு பலி

Published On 2020-08-28 13:48 IST   |   Update On 2020-08-28 13:48:00 IST
பாகூர் தாசில்தார் அலுவலக ஊழியர் கொரோனா தொற்றுக்கு இறந்து போனார். அவர் பலியானது மற்ற ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகூர்:

பாகூர் அருகே குருவிநத்தம் பெரியார் நகரை சேர்ந்தவர் செங்கதிர் (வயது41). இவர் ஊர்காவல் படையில் பணிபுரிந்து பின்னர் பாகூர் தாசில்தார் அலுவலகத்தில் பல்நோக்கு ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கதிர் உடல்நிலை பாதிக்கப்பட்டார். கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதித்த போது செங்கதிருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் கதிர்காமம் ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி செங்கதிர் நேற்று இறந்து போனார்.

கொரோனாவுக்கு பலியான செங்கதிருக்கு ஷீலா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாசில்தார் அலுவலக ஊழியர் செங்கதிர் கொரோனாவால் இறந்து போனதால் மற்ற ஊழியர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

மேலும் பாகூர் பகுதியில் ஏற்கனவே ஒரு பெண் கொரோனாவுக்கு பலியாகி இருந்த நிலையில் தற்போது தாசில்தார் அலுவலக ஊழியர் இறந்து போனதால் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News