செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

சென்னைக்கு வயது 381- முதலமைச்சர் வாழ்த்து

Published On 2020-08-22 10:19 IST   |   Update On 2020-08-22 10:19:00 IST
சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினத்தையொட்டி  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து டுவிட் செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று!

கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித்தந்த சென்னையின் வயது 381.

பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை, கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் மீண்டு வரும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Similar News