செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா மையங்களில் பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்ற உத்தரவு- ரத்து செய்ய சங்கத்தினர் கோரிக்கை

Published On 2020-08-16 17:26 IST   |   Update On 2020-08-16 17:26:00 IST
கொரோனா மையங்களில் பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்ற கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவிற்கு பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா மையங்களில் பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்ற கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவிற்கு பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், “நாளை (திங்கட்கிழமை) முதல் 31-ந் தேதி வரை கொரோனா மையங்களில் பகுதி நேர ஆசிரியர்கள் 18 பேர் பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் ஒருவர் மாற்றுத்திறனாளி ஆவார். 15 பேர் பெண்கள் ஆவார்கள். பஸ் வசதி இல்லாத நிலையில் பணிக்கு வந்து செல்ல சிரமமாக இருக்கும். எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்றனர்.

Similar News