செய்திகள்
புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா
புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
புதுச்சேரி:
புதுச்சேரி சமூக நலத்துறைஅமைச்சர் கந்தசாமியின் தாயார் ராஜம்மாளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பரிசோதனையில் அமைச்சர் கந்தசாமி, மகன் விக்னேஷ் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இவர்கள் ஜிப்மரில் சிகிச்சை பெற்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் காரைக்காலை சேர்ந்தவர். அவர், புதுச்சேரி தீயணைப்பு நிலையம் அருகேயுள்ள அரசு இல்லத்தில் தங்கியுள்ளார். அவருக்குக் காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டது. இதனால், சுகாதாரத்துறை சார்பில் அவருக்கு இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், கொரோனா தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து, ஜிப்மரில் இன்று மதியம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி சமூக நலத்துறைஅமைச்சர் கந்தசாமியின் தாயார் ராஜம்மாளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பரிசோதனையில் அமைச்சர் கந்தசாமி, மகன் விக்னேஷ் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இவர்கள் ஜிப்மரில் சிகிச்சை பெற்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரி கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் காரைக்காலை சேர்ந்தவர். அவர், புதுச்சேரி தீயணைப்பு நிலையம் அருகேயுள்ள அரசு இல்லத்தில் தங்கியுள்ளார். அவருக்குக் காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டது. இதனால், சுகாதாரத்துறை சார்பில் அவருக்கு இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், கொரோனா தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து, ஜிப்மரில் இன்று மதியம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.