செய்திகள்
போராட்டம் நடத்திய சுகாதார ஊழியர்கள் 50 பேர் மீது வழக்கு
ஊரடங்கு காலத்தில் நோய் பரப்பும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக சுகாதார ஊழியர்கள் 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கொரோனா நோயாளிகள் அதிகரிப்பதால் கொரோனா பிரிவில் பணிபுரிய கூடுதல் செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களை பணியமர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஊழியர்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே ஊரடங்கு காலத்தில் நோய் பரப்பும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக சுகாதார ஊழியர்கள் 50 பேர் மீது கோரிமேடு போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.