செய்திகள்
மயிலாடுதுறை தொகுதி எம்பி சே.ராமலிங்கத்துக்கு கொரோனா
மயிலாடுதுறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சே.ராமலிங்கத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை:
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், மயிலாடுதுறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சே.ராமலிங்கத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே நாகை எம்.பி., செல்வராசு மற்றும் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியான நிலையில் மயிலாடுதுறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சே.ராமலிங்கத்துக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், மயிலாடுதுறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சே.ராமலிங்கத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே நாகை எம்.பி., செல்வராசு மற்றும் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியான நிலையில் மயிலாடுதுறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சே.ராமலிங்கத்துக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.