செய்திகள்
வேதாரண்யம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து பெண் பலி
வேதாரண்யம் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி புஷ்பவள்ளி(வயது45). இவர் அதே பகுதியில் கருப்பம்புலம் மேலக்காடு கிராமத்தில் உள்ள தனியார் பூக்கொல்லையில் பூ பறித்துக் கொண்டு இருந்தார்.
அப்போது பூக்கொல்லையின் மேலே சென்ற மின்கம்பி திடீரென அறுந்து புஷ்பவள்ளி மீது விழுந்தது. இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக புஷ்பவள்ளி இறந்தார். இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.