செய்திகள்
கொரோனா வைரஸ்

நாகை எம்பி செல்வராசுக்கு கொரோனா தொற்று

Published On 2020-08-02 10:08 GMT   |   Update On 2020-08-02 10:08 GMT
நாகை பாராளுமன்ற எம்பி செல்வராசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாகை:

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் நாகை பாராளுமன்ற எம்பி செல்வராசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த செல்வராசு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News