செய்திகள்
குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவிட்டார்.
அரியலூர்:
குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட அரியலூர் மாவட்டம், அருங்கால் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியை(வயது 50) ஏற்கனவே கீழப்பழுவூர் போலீசார் கைது செய்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்துள்ளனர். இதேபோல் வாரணவாசி சமத்துவபுரத்தை சேர்ந்த அருண்பாண்டியனை(30) கைது செய்து அரியலூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் 2 பேரும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்பதால், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதனை தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி, அருண்பாண்டியன் ஆகிய 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவின் நகலை கிளை சிறையில் இருந்த கிருஷ்ணமூர்த்தி, அருண்பாண்டியனிடம் போலீசார் வழங்கி, அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.