செய்திகள்
தற்கொலை

வயிற்றில் வளரும் குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை : மனமுடைந்த கர்ப்பிணி தற்கொலை

Published On 2020-07-30 09:28 GMT   |   Update On 2020-07-30 09:28 GMT
வயிற்றில் வளரும் குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை என தெரிந்த தால் திருமனூர் அருகே மன முடைந்த கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.
கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சுள்ளங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கலைவாணன். இவரது மனைவி மாலதி (வயது 25). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், மீண்டும் கர்ப்பம் அடைந்த மாலதி, தற்போது 7 மாத கர்ப்பமாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வயிற்றில் வளரும் குழந்தையின் உடல் ஆரோக்கியம் குறித்து தெரிந்து கொள்வதற்காக மாலதி ஒரு மருத்துவமனையில் தன்னை பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதாக மாலதியிடம் கூறியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த மாலதி கடந்த 24-ந்தேதி எலி மருந்தை (விஷம்) தின்று வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மாலதி உயிரிழந்தார். முன்னதாக மருத்துவ மனையில் சிகிச்சையில் இருந்த போது மாலதிக்கு கொரோனா தொற்று இருந்ததாகவும் கூறப் படுகிறது. இது தொடர்பாக திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அரியலூர் வருவாய் கோட்டாட்சியரும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறார்.
Tags:    

Similar News