செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 122 பேருக்கு கொரோனா

Published On 2020-07-30 12:23 IST   |   Update On 2020-07-30 12:23:00 IST
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 122 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 16 லட்சத்தை  நெருங்கி உள்ளது. மொத்தம் 15,83,792 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 52,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 775 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,968 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது. இதுவரை 10,20,582 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,28,242 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 122 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 122 பேருக்கு கொரோனா உறுதியானதால், புதுச்சேரியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,293 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 1,953 பேர் குணமடைந்துள்ளனர்.  மருத்துவமனைகளில் 1,292 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

Similar News