செய்திகள்
மடிக்கணினிகள் திருட்டு

அரசு பள்ளியில் மடிக்கணினிகள் திருட்டு

Published On 2020-07-27 07:22 GMT   |   Update On 2020-07-27 07:22 GMT
கா.அம்பாபூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மடிக்கணினிகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வி.கைகாட்டி:

அரியலூர் மாவட்டம் கா.அம்பாபூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த கல்வியாண்டுக்கான மடிக்கணினி மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. அதுபோக மீதம் இருந்த 7 மடிக்கணினிகள் தலைமையாசிரியர் அறையில் வைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு தலைமையாசிரியர் மனோகரன் சென்றபோது பள்ளியில் உள்ள கேட்டின் பூட்டும், கண்காணிப்பு கேமராவும் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, அவரது அறையில் இருந்த மடிக்கணினிகள் திருடுபோய் இருப்பது தெரிந்தது. இதுகுறித்து மனோகரன் அளித்த புகாரின் பேரில் கயர்லாபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News