செய்திகள்
தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-07-25 12:58 IST   |   Update On 2020-07-25 12:58:00 IST
அரியலூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர்:

அரியலூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள தொழிலாளர்களுக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இச்சட்டத்தை மாநில அரசு திரும்பப்பெற வலியுறுத்தி சென்னை பல்லவன் இல்லம் முன்பு நடைபெறவுள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு அனைத்து தொழிலாளர்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News