செய்திகள்
கைது

விக்கிரமங்கலம் அருகே பெண்ணை தாக்கிய விவசாயி கைது

Published On 2020-07-22 12:51 IST   |   Update On 2020-07-22 12:51:00 IST
விக்கிரமங்கலம் அருகே பெண்ணை தாக்கிய விவசாயியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள மழவராயநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி(வயது 40). அதே பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வியின் உறவினர் சீனிவாசன்(62). விவசாயி. இவர்கள் இரு குடும்பத்தினருக்கும் இடையே இடப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. 

இந்நிலையில் பிரச்சினைக்குரிய நிலத்தில் சீனிவாசன் கொட்டகை அமைத்துள்ளார். அப்போது அங்கு வந்த தமிழ்ச்செல்வி, அவரை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனிவாசன், தமிழ்ச்செல்வியை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த தமிழ்ச்செல்வி அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிந்து சீனிவாசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News