செய்திகள்
நளினியை புழல் சிறைக்கு மாற்றக் கோரி தாயார் கடிதம்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினியை புழல் சிறைக்கு மாற்றக் கோரி அவரது தாயார் கடிதம் எழுதியுள்ளார்.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 28 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
நேற்று சக கைதியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அறையில் துணியால் கழுத்தை நெரித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினியின், தாயார் பத்மா சிறைத்துறை டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். கொலை வழக்கு தொடர்பாக சிறையில் உள்ள நளினியை புழல் சிறைக்கு மாற்றக் கோரி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
வேலூர் பெண்கள் சிறையில் நளினி தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவரது தாயார் பத்மா சிறைத்துறை டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 28 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.
நேற்று சக கைதியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அறையில் துணியால் கழுத்தை நெரித்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினியின், தாயார் பத்மா சிறைத்துறை டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். கொலை வழக்கு தொடர்பாக சிறையில் உள்ள நளினியை புழல் சிறைக்கு மாற்றக் கோரி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
வேலூர் பெண்கள் சிறையில் நளினி தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவரது தாயார் பத்மா சிறைத்துறை டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார்.