செய்திகள்
லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
அரிமளம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிமளம்:
அரிமளம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் யோகராஜ் மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது வையாபுரிபட்டி பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
இதில், அவர்கள் அரிமளம் அருகே உள்ள தெற்குகுடியிருப்பு கிராமத்தை சேர்ந்த அருள்(வயது 45), கே.புதுப்பட்டி அருகே உள்ள கும்மங்குடி கிராமத்தை சேர்ந்த சிதம்பரம்(50) என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.300-ஐ பறிமுதல் செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.