செய்திகள்
கைது

கறம்பக்குடி அருகே மது விற்ற 3 பேர் கைது

Published On 2020-07-18 14:36 GMT   |   Update On 2020-07-18 14:36 GMT
கறம்பக்குடி அருகே மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி:

கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் கறம்பக்குடி அம்புக்கோவில் முக்கம், புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த வீரமுத்து(வயது 29), நேதாஜி(39), புதுப்பட்டியை சேர்ந்த இளமுருகு(47) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News