செய்திகள்
மின்சார நிறுத்தம்

பண்ருட்டி, கீழ்கவரப்பட்டு பகுதியில் நாளை மின்நிறுத்தம்

Published On 2020-07-17 12:52 IST   |   Update On 2020-07-17 12:52:00 IST
பண்ருட்டி, கீழ்கவரப்பட்டு பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
பண்ருட்டி:

பண்ருட்டி நகர துணை மின் நிலையத்தில் நாளை(சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக பண்ருட்டி நகரம் முழுவதும், திருவதிகை, ஆ.ஆண்டிக்குப்பம், இருளங்குப்பம், சீரங்குப்பம், தி.ராசாபாளையம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, எல்.என்.புரம், கந்தன்பாளையம், வ.உ.சி.நகர், சாமியார் தர்கா, அ.ப.சிவராமன் நகர், பணிக்கன்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையார்குப்பம், செம்மேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

இதேபோல் கீழ் கவரப்பட்டு துணை மின்நிலையத்திலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வடக்கு பாளையம், லாலாப்பேட்டை, எம்.புதுப்பாளையம், சாலை நகர், கொங்கராயனூர், இடையன் வெளி, ராஜா நகர், நத்தமேடு, சிங்காரப்பேட்டை, மேல்பட்டாம்பாக்கம் மெயின் ரோடு மேற்கு பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர்கள் பண்ருட்டி பழனிராஜூ, நெல்லிக்குப்பம் லீனா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

விருத்தாசலம் பூதாமூரில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக கீழப்பாளையூர், மேலப்பாளையூர், கண்டியாங்குப்பம், விருத்தாசலம் நகரம், தென்னக ரெயில்வே, கார்மாங்குடி, சாத்துக்கூடல், ஆலிச்சிக்குடி, குமாரமங்கலம், சாத்தமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் இருக்காது. மேற்கண்ட தகவலை விருத்தாசலம் மின்வாரிய செயற்பொறியாளர் சுகன்யா தெரிவித்துள்ளார்.

Similar News