செய்திகள்
கைதி ராஜா

அறந்தாங்கி சிறுமி கொலை வழக்கு: கைதி ராஜா தப்பியோட்டம் - காவலர்கள் சஸ்பெண்ட்

Published On 2020-07-16 18:01 IST   |   Update On 2020-07-16 18:01:00 IST
அறந்தாங்கி சிறுமி வன்கொடுமை வழக்கில் கைதான ராஜா போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியுள்ள நிலையில் இரு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் என்ற கிராமத்தில் வசித்து வந்த 7 வயது சிறுமியை ராஜா என்ற பூக்கடைக்காரர் பலாத்காரம் செய்து பின்னர் சிறுமியின் கழுத்தை அறுத்து கொன்று கண்மாயில் உள்ள புதரில் வீசிவிட்டார். இதையடுத்து போலீசார் ராஜாவை கைது செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் இன்று குற்றவாளி ராஜா போலீசாரிடம் இருந்து தப்பியோடினார்.  புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது கைவிலங்கை உருவிக்கொண்டு தப்பியோடிய ராஜாவை 6 பேர் கொண்ட தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ராஜா தப்பியோடிய நிலையில் இரு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.  காவலர்கள் முருகையன், கோகுலகுமார் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.  

Similar News