செய்திகள்
காஞ்சிபுரம் அருகே மணல் கடத்தல்- 3 பேர் கைது
காஞ்சிபுரம் அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த புஞ்சையரசந்தாங்கல் பகுதியில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார்.
அப்போது அங்கு மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய அனுமந்தபேட்டையை சேர்ந்த வரதராஜ் (வயது 42), குரங்கணிமுட்டம் பகுதியை சேர்ந்த மதியழகன் (42), தூசியை சேர்ந்த மாதவன் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரத்தை அடுத்த புஞ்சையரசந்தாங்கல் பகுதியில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார்.
அப்போது அங்கு மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய அனுமந்தபேட்டையை சேர்ந்த வரதராஜ் (வயது 42), குரங்கணிமுட்டம் பகுதியை சேர்ந்த மதியழகன் (42), தூசியை சேர்ந்த மாதவன் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.