செய்திகள்
விபத்து காயம்

ஆவூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- 2 வாலிபர்கள் படுகாயம்

Published On 2020-07-04 14:27 GMT   |   Update On 2020-07-04 14:27 GMT
ஆவூர் அருகே விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவூர்:

ஆவூர் அருகே உள்ள அருவங்கால்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் சரவணன் (வயது 29). இவர் நேற்று முன்தினம் இரவு ஆலங்குளத்தில் இருந்து நாலுரோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். நாலுரோடு அருகே சென்றபோது எதிரே இலுப்பூர் தாலுகா பெரியகுரும்பப்பட்டியை சேர்ந்த ராசு மகன் கணேசன்(33) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது சரவணன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 2 பேரும் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அவர்களுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News