செய்திகள்
கந்தர்வகோட்டை அருகே கடத்தப்பட்ட தொழிலதிபர் கொலை
புதுக்கோட்டை கந்தர்வகோட்டை அருகே கடத்தப்பட்ட தொழிலதிபர் தவமணி கொலை செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்வகோட்டை வெள்ளாளவிடுதியை சேர்ந்தவர் தவமணி. இவர், சென்னையில் உள்ள பிரபல ஜவுளி மற்றும் நகைக்கடைகளுக்கு தச்சுவேலை செய்துவந்தார்.
கடந்த ஜூன் 18-ம் தேதி தோட்டத்திற்கு சென்ற இவரை, மிளகாய் பொடிதூவி மர்ம கும்பல் கடத்தி சென்றது. அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில், அவர் கொலை செய்யப்பட்டு, கல்லணை அருகே தோகூரில் காவிரியாற்றில் வீசப்பட்டது தெரியவந்துள்ளது. சடலத்தை போலீசார் தேடி வருகின்றனர்.