செய்திகள்
கொலை செய்யப்பட்ட தவமணி

கந்தர்வகோட்டை அருகே கடத்தப்பட்ட தொழிலதிபர் கொலை

Published On 2020-07-02 16:14 GMT   |   Update On 2020-07-02 16:46 GMT
புதுக்கோட்டை கந்தர்வகோட்டை அருகே கடத்தப்பட்ட தொழிலதிபர் தவமணி கொலை செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்வகோட்டை வெள்ளாளவிடுதியை சேர்ந்தவர் தவமணி. இவர், சென்னையில் உள்ள பிரபல ஜவுளி மற்றும் நகைக்கடைகளுக்கு தச்சுவேலை செய்துவந்தார்.

கடந்த ஜூன் 18-ம் தேதி தோட்டத்திற்கு சென்ற இவரை, மிளகாய் பொடிதூவி மர்ம கும்பல் கடத்தி சென்றது. அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில், அவர் கொலை செய்யப்பட்டு, கல்லணை அருகே தோகூரில் காவிரியாற்றில் வீசப்பட்டது தெரியவந்துள்ளது. சடலத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News