செய்திகள்
இளம்பெண் தற்கொலை

செய்யூர் அருகே இளம்பெண் தற்கொலை

Published On 2020-06-26 07:07 GMT   |   Update On 2020-06-26 07:07 GMT
செய்யூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுராந்தகம்:

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த நயினார்குப்பத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் சசிகலா (வயது 25). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்போது வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார் மேலும் வீட்டில் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்து காணப்பட்டார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்புறம் உள்ள பனை மரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சசிகலாவின் அண்ணன் செய்யூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News