செய்திகள்
வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேச அனுமதிக்க கோரி 12-வது நாளாக முருகன் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று காரணமாக கைதிகளை அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக அவர்கள் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் முருகன் உறவினர்களிடம் அவ்வாறு பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தனது மனைவி நளினியிடம் பேசவும் சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.
இதனால் மனமுடைந்த முருகன் கடந்த 1-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று அவர் 12-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். தொடர் உண்ணாவிரதம் காரணமாக முருகன் மிகவும் சோர்வடைந்து காணப்படுகிறார். அவரின் உடல்நிலை மோசமானால் உடனடியாக மீண்டும் குளுக்கோஸ் ஏற்றப்படும். உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று காரணமாக கைதிகளை அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக அவர்கள் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் முருகன் உறவினர்களிடம் அவ்வாறு பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தனது மனைவி நளினியிடம் பேசவும் சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.
இதனால் மனமுடைந்த முருகன் கடந்த 1-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று அவர் 12-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். தொடர் உண்ணாவிரதம் காரணமாக முருகன் மிகவும் சோர்வடைந்து காணப்படுகிறார். அவரின் உடல்நிலை மோசமானால் உடனடியாக மீண்டும் குளுக்கோஸ் ஏற்றப்படும். உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.