செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் இன்று 50 சதவீத தனியார் பஸ்கள் இயங்கின
கடலூர் மாவட்டத்தில் உள்ள 240 தனியார் பஸ்களில் 50 சதவீத பஸ்கள் மட்டும் இன்று காலை இயக்கப்பட்டது.
கடலூர்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை 5-ம் கட்டமாக வருகிற 30-ந்தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டது. இந்த ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளையும் அரசு அறிவித்து உள்ளது.
அதன்படி நோய் பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 1-ந்தேதி முதல் 60 சதவீத பயணிகளுடன் 50 சதவீத பஸ்களை இயக்கலாம் என அரசு அறிவித்தது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 11 போக்குவரத்து மண்டலங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களை இயக்க முடிவு எடுக்கப்பட்டது. பயணிகளின் வருகை குறைவாக இருந்ததால் 200-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டது. அரசு பஸ்களில் சமூக இடைவெளியுடன் குறைவான பயணிகளை பயணம் செய்து வந்தனர்.
தனியார் பஸ்களும் கடந்த 1-ந்தேதி முதல் இயக்கப்படலாம் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட போதிலும் கொரோனா அச்சம் காரணமாக பயணிகளின் வருகை அரசு பஸ்சில் குறைந்து காணப்பட்டதாலும், பொருளாதார சிக்கல்களின் காரணமாகவும் தனியார் பஸ்களை உரிமையாளர்கள் இயக்கவில்லை.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று முதல் தனியார் பஸ்களை இயக்குவது என்று பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பஸ்களை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்து இன்று இயக்குவதற்கான நடவடிக்கையில் உரிமையாளர்கள் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 240 தனியார் பஸ்களில் 50 சதவீத பஸ்கள் மட்டும் இன்று காலை இயக்கப்பட்டது. கடலூர், சிதம்பரம் பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தனியார் பஸ்கள் இன்று காலை இயங்கின.
தனியார் பஸ்களில் பணியாற்றிய டிரைவர்-கண்டக்டர்கள் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்திருந்தனர். பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பயணம் செய்தனர். பஸ்சில் பயணம் செய்த பயணிகளுக்கு சானிடைசர் வழங்கப்பட்டது. அதனை கொண்டு பயணிகள் கைகளை சுத்தம் செய்தனர். தனியார் பஸ்களிலும் பயணிகளின் கூட்டம் இன்று காலை குறைவாகவே காணப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை 5-ம் கட்டமாக வருகிற 30-ந்தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டது. இந்த ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளையும் அரசு அறிவித்து உள்ளது.
அதன்படி நோய் பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 1-ந்தேதி முதல் 60 சதவீத பயணிகளுடன் 50 சதவீத பஸ்களை இயக்கலாம் என அரசு அறிவித்தது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 11 போக்குவரத்து மண்டலங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களை இயக்க முடிவு எடுக்கப்பட்டது. பயணிகளின் வருகை குறைவாக இருந்ததால் 200-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டது. அரசு பஸ்களில் சமூக இடைவெளியுடன் குறைவான பயணிகளை பயணம் செய்து வந்தனர்.
தனியார் பஸ்களும் கடந்த 1-ந்தேதி முதல் இயக்கப்படலாம் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட போதிலும் கொரோனா அச்சம் காரணமாக பயணிகளின் வருகை அரசு பஸ்சில் குறைந்து காணப்பட்டதாலும், பொருளாதார சிக்கல்களின் காரணமாகவும் தனியார் பஸ்களை உரிமையாளர்கள் இயக்கவில்லை.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று முதல் தனியார் பஸ்களை இயக்குவது என்று பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பஸ்களை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்து இன்று இயக்குவதற்கான நடவடிக்கையில் உரிமையாளர்கள் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 240 தனியார் பஸ்களில் 50 சதவீத பஸ்கள் மட்டும் இன்று காலை இயக்கப்பட்டது. கடலூர், சிதம்பரம் பண்ருட்டி, விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தனியார் பஸ்கள் இன்று காலை இயங்கின.
தனியார் பஸ்களில் பணியாற்றிய டிரைவர்-கண்டக்டர்கள் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்திருந்தனர். பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பயணம் செய்தனர். பஸ்சில் பயணம் செய்த பயணிகளுக்கு சானிடைசர் வழங்கப்பட்டது. அதனை கொண்டு பயணிகள் கைகளை சுத்தம் செய்தனர். தனியார் பஸ்களிலும் பயணிகளின் கூட்டம் இன்று காலை குறைவாகவே காணப்பட்டது.