செய்திகள்
வழக்கு பதிவு

குடும்பதகராறில் கோஷ்டி மோதல்- 11 பேர் மீது வழக்கு

Published On 2020-06-06 10:23 GMT   |   Update On 2020-06-06 10:23 GMT
குடும்பதகராறில் கோஷ்டி மோதலில் 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொன்னமராவதி:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியை சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன் (வயது52) மற்றும் இளையராஜா(32).

உறவினர்களாகிய இவர்களிடையே குடும்பதகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருதரப்பினர்க்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது இருதரப்பினரும் அரிவாள் மற்றும் இரும்பு கம்பியால் மோதிக்கொண்ட னர். இதில் இளையராஜா மற்றும் சுப்பிரமணியன்ஆகியோர் காயமடைந்து சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்துஇரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News