செய்திகள்
கொரோனா வைரஸ்

கடலூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-06-06 08:07 GMT   |   Update On 2020-06-06 08:07 GMT
கடலூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்று கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த 49 வயதுடையவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் சென்னையில் இருந்து வந்தவர். மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த 29 வயது நபருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கடலூர் பகுதியை சேர்ந்தவர் 39 வயதுடைய நபருக்கும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்த 40 வயதுடையவர் சொந்த ஊரான புவனகிரிக்கு வந்தார்.

அவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்களை ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டில் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 471 இருந்தது. இன்று ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 475 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News