செய்திகள்
கபசுர குடிநீர் பொடி

பத்திரக்கோட்டையில் வீடு வீடாக கபசுர குடிநீர் பொடி

Published On 2020-05-21 19:58 IST   |   Update On 2020-05-21 19:58:00 IST
பத்திரக்கோட்டையில் அப்பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் பொடி 50 கிராம் பாக்கெட் வீடுதோறும் சுகாதாரத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
பண்ருட்டி:

பண்ருட்டி ஒன்றியம் சிலம்பிநாதன்பேட்டை ஊராட்சி, பத்திரக்கோட்டை கிராமத்தில் 4 பேருக்கு கொரானா தொற்று உறுதியானதை அடுத்து அப்பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் பொடி 50 கிராம் பாக்கெட் வீடுதோறும் சுகாதாரத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சீனுவாசன், ரேவதி, வழிகாட்டுதலின்படிஒன்றிய கவுன்சிலரும் கூட்டுறவு சங்கத் தலைவருமான கல்யாணசுந்தரம், ஊராட்சி செயலாளர் வெங்கடேசன், ஊராட்சிமன்ற உறுப்பினர் பாலகுரு, வாட்டர் டேங்க் ஆப்பரேட்டர் வேல்முருகன் ஆகியோர் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

Similar News