செய்திகள்
மின்தடை

பண்ருட்டி திருவதிகையில் நாளை மின் தடை

Published On 2020-05-21 19:20 IST   |   Update On 2020-05-21 19:20:00 IST
பண்ருட்டி கோட்டத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
பண்ருட்டி:

பண்ருட்டி கோட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் திருவதிகை, மேட்டுகுப்பம், வீரப்பார், திருவாமூர், ராசாப்பாளையம் ஆகிய பீடர்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (22-ந் தேதி) நடக்கிறது.

எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை வரதராஜபுரம், ஆதம்கான் தர்க்கா, சேர்மேன் மணிநகர், திருவதிகை, செட்டிப்பட்டறை, ஹவுசிங் போர்டு, கண்டரக்கோட்டை, புலவனூர், பெரிய காட்டு பாளையம், கீழிருப்பு, மேலிருப்பு, திருவாமூர், காமாட்சி பேட்டை, திடீர் குப்பம், சிறுவத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை செயற்பொறியாளர் பழனிராஜ் தெரிவித்து உள்ளார்.

Similar News